பிரதேச மட்ட சிறுவர் பாதுகாப்பு குழுக்கூட்டம் 14.03.2022 அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உத்தியோகத்தர்கள், சிறுவர் பெண்கள் பொலிஸ் அதிகாரிகள், தொழில் திணைக்கள உத்தியோகத்தர்கள், சிறுவர் இல்ல நிர்வாகி மற்றும் கிராம அலுவலர்கள், சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். இக் கலந்துரையாடலில் சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக குறித்த தரப்பினருடன் கலந்துரையாடப்பட்டது.
|
![]() |
|
சிறுவர் கழகப் பிள்ளைகளுக்கு சிறுவர் உரிமை விழிப்புணர்வு செயலமர்வுகள் கரம்பை குறிச்சி, மறுவன்புலவு பிரிவுகளில் கடந்த 04.03.2022, 13.03.2022 தினங்களில் இடம்பெற்றது.
|
|
|
![]() |
![]() |
![]() |
எமது பிரதேச செயலகத்தில் அலுவலக உத்தியோகத்தர்களுக்கான வீதி ஒழுங்கு விதிகள் தொடர்பான பயிற்சிப்பட்டறை 2022.03.25 இன்று மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ இணைப்பு அலகு மற்றும் மாவட்ட மோட்டார் போக்குவரத்து பிரிவினாலும் இணைந்து நடாத்தப்பட்டது.
|
|
![]() |
![]() |
மட்டுவில் மத்தி, சரசாலை தெற்கு, தென்மட்டுவில் பிரிவுகளில் உலக தரிசன நிறுவனத்தினரால் சிறுவர்கழகத்தின் பதின்ம வயதுப் பிரிவுக்குட்பட்ட சிறுவருக்கான திறன் விருத்தி செயற்திட்ட அறிமுக நிகழ்வு கடந்த மாதம் இடம்பெற்றது.
|
![]() |
|
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |





























