யா/மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயத்தில் க.பொ.த சாதரண தரம் இடை விலகிய மாணவர்களுக்கு தொழில் வழி காட்டல் நிகழ்ச்சி எமது பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்களான மோ. நிலாந்தி, சீ. சிவதாசன், மற்றும் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் ச.சிவரஞ்சன் ஆகியோரால் நடாத்தப்பட்டது.
![]() |
![]() |
|
யா/கொடி காமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரியில் க.பொ.த சாதாரண தரம் இடை விலகிய மாணவர்களுக்கான தொழில் வழி காட்டல் நிகழ்ச்சி 2022.09.21 இன்று மாவட்ட செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் கே. தீபா மற்றும் எமது பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்களான மோ. நிலாந்தி, சீ. சிவதாசன், ஆகியோரால் நடாத்தப்பட்டது.
![]() |
![]() |
சிறுவர் பாதுகாப்பு, சிறுவர் உரிமை மற்றும் கட்டிளமைப்பருவ நடத்தைகள் தொடர்பான பெற்றோர் மற்றும் மாணவர்களிற்கான விழிப்புணர்வு நிகழ்வு 07.09.2022 அன்று யா/ விடத்தற்பளை கமலாசனி வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
![]() |
|
![]() |
"சுரகிமு கங்கா " தேசிய சுற்றாடல் நிகழ்ச்சித்திட்டம் /பிரதேச சுற்றாடல் குழுக்கூட்டம் என்பவற்றுக்குரிய கலந்துரையாடல் நிகழ்வு பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 20.09.2022 அன்று நடைபெற்றது.
|
|
மாணவர்களது கற்றல் செயற்பாடு, கண்காணிப்பு, எதிர்கால தொழில் போக்கு, தொழில் சார் பயிற்சி தொடர்பான பெற்றோர்களுக்கான விழிப்பூட்டல் நிகழ்வு இன்று 2022.09.13 கொடிகாமம் வடக்கு பிரிவில் மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் திருமதி.மோ. நிலாந்தி,திரு. சீ. சிவதாசன் மற்றும் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. சிவரஞ்சன் அவர்களினால் நடாத்தப்பட்டது.
![]() |
![]() |























