பிரதேச மட்ட சிறுவர் கண்காணிப்புக்குழுக் கூட்டமானது 2025.11.26 ( புதன் கிழமை) அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர்பிரதேச மட்ட சிறுவர் கண்காணிப்புக்குழுக் கூட்டமானது 2025.11.26 ( புதன் கிழமை) அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர்F C சத்தியசோதி தலைமையில் காலை 11.00 மணிக்கு ஆரம்பமாகியது. இக் கூட்டத்தில் பிரதிக்கல்விப் பணிப்பாளர் P.பரணீதன்,உதவி சுகாதார வைத்திய அதிகாரி H G S சஜீவனி மற்றும் கோட்டக்கல்வி அதிகாரி, பாடசாலை அதிபர்கள், பொலிஸ் பொறுப்பதிகாரி (கொடிகாமம்), உதவிப் பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி முகாமையாளர்  (தலைமைப்பீடம்) , பொலிஸ் உத்தியோகத்தர்கள். தொழில் உத்தியோகத்தர் , மதுவரி உத்தியோகத்தர், அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் , பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம மட்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடன் சிறுவர் பாதுகாப்பு , சிறுவர் அபிவிருத்தி சார்ந்த விடயங்கள் ஆராயப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
 
592174530 2057423655111922 1966702537090655557 n     592160807 2057423651778589 5560575817267414512 n
   

விசேட பிரதேச மட்ட காணிபயன்பாட்டு திட்டமிடல் குழுக்கூட்டம் 18.11.2025 செவ்வாய்க் கிழமை பி.ப 2.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உதவிப் பிரதேச செயலாளர், நீர்ப்பாசனத் திணைக்கள பொறியியலாளர், பிரதேச சபை தவிசாளர் நகரசபை செயலாளர், வனபரிபாலனத் திணைக்கள மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள், மத்திய சுற்றாடல் அதிகார சபை அலுவலர்கள், கமநல சேவை நிலைய கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள், கிராம அலுவலர்கள், கமக்கார அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் காணிக் கிளை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். இதில் வன பரிபாலனத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களினால் வர்த்தமானி அறிவித்தல் செய்யப்பட்டு கையகப்படுத்தப்பட்ட காணிகளில் பொதுமக்களின் பயன்பாட்டிலுள்ள காணிகள் மற்றும் பொது தேவைக்கு ஒதுக்கப்பட்ட காணிகள் உள்ளடங்குவதனால் அக்காணிகள் விடுவித்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

586447149 2047536022767352 1691648732181065157 n

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் வரணி சமுர்த்தி வங்கியின் போதைப்பொருள் எதிர்ப்பு கொடிதின சேமிப்பு நிதியிலிருந்து வரணி சமுர்த்தி வங்கிக்கு உட்பட்ட 126 மாணவர்களுக்கான 233,939.72 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணம் மற்றும் 42,000.00 ரூபா பெறுமதியான சிசுதிரிய புலமைபரிசில் வழங்கும் நிகழ்வானது மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் தலைமையில் 14.11.2025 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் உதவிப் பிரதேசசெயலாளர், கணக்காளர், சமுர்த்தி முகாமையாளர்கள், உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், CBO தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

584759537 2046689149518706 3678424971527133666 n 584705837 2046689546185333 7452905241290264312 n 585356714 2046688876185400 3128964704102957053 n

பிரதேச மட்ட கலைஇலக்கிய விழாவானது 2025.11.14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் தென்மராட்சி கலாசார மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.
பிரதம விருந்தினராக தென்மராட்சி பிரதேச செயலாளர் திரு F.C சத்தியசோதி அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். இந் நிகழ்வில் இவ்வருடம் பிரதேச மட்டத்தில் நடாத்தப்பட்டிருந்த கலை இலக்கிய போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய போட்டியாளர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் என்பன வழங்கி கெளரவிக்கப்பட்டிருந்தன. கலைநிறுவனங்களின் கலைநிகழ்வுகள் ஆற்றுகைகளும் இடம்பெற்றிருந்தன.
 
585865515 2047534579434163 6252490315759164508 n

 

         

584735446 2047534476100840 2582284082684684811 n

தென்மராட்சிப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட 20 சிறு தொழில் முயற்சியாளர்களுக்கு அழகுக்கலை நிகழ்வானது சாவகச்சேரி நகர் கிராம சேவையாளர் பிரிவில் 2025.11.07ம் திகதி பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது. இவ் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் வளவாளரான தி.நிதர்ஷனா ஆகியோர் கலந்து கொண்டனர். இன்றைய காலகட்டத்தில் அழகுக்கலையின் தேவை அதிகமாக காணப்படுவதனால் யுவதிகளுக்கு புதிய தொழில் வாய்ப்பினை மேம்படுத்துவதனை நோக்கமாக கொண்டு இப் பயிற்சி நெறியானது வழங்கப்பட்டது.

 579400988 2039859310201690 3399297779391951449 n 578719045 2039859410201680 5761484684481440696 n

News & Events

08
செப்2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
செப்2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top