இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதற்காக 100,000 அரச காணித்துண்டுகளில் முதலீட்டு வாய்ப்புக்களை வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் தொழில் முயற்சி ஆற்றல் தொடர்பாக பரீட்சிக்கும் நேர்முகப் பரீட்சை ஆனது எமது பிரதேச செயலகத்தில் 24 ,25.02.2021 ஆகிய திகதிகளில் நடைபெற்றது. மேற்குறித்த நேர்முக தேர்வில் 269 விண்ணப்பதாரிகள் பங்குபற்றினர்.
![]() |
![]() |
![]() |
நமது நாட்டின் 73வது தேசிய சுதந்திரதினவிழா "பாதுகாப்பான தேசம் -செழிப்பான நாடு" எனும் தொனிப்பொருளுடன் நேற்று கொண்டாடப்பட்டது. காலை 8.00 மணியளவில் தேசிய கோடி ஏற்றலுடன் இவ் நிகழ்வு ஆரம்பமாகியது.இவ் நிகழ்வினை முன்னிட்டு பிரதேச செயலக வளாகத்திலும் கிராம அலுவலர் பிரிவுகளிலும் காலை 9.29 ற்கு சுப முகூர்த்த வேளையில் மரக்கன்றுகள் நாட்டப்பட்டது. அதனைதொடர்ந்து சிரமதான பணிகள் நடைபெற்றது.
|
|
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவிற்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டமானது 12.01.2021 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.45 மணியளவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமாகிய கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், யாழ் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், தென்மராட்சி பிரதேச செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ சி .சிறிதரன் மற்றும் கௌரவ செ .கஜேந்திரன் , சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர், மற்றும் நகரசபை உப தவிசாளர் ,உறுப்பினர்கள், அரச உத்தியோகத்தர்கள், சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதிகள், முப்படையினர் , திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்டோர் என பல தரப்பினரும் கலந்துகொண்டனர்.
![]() |
![]() |
சாவகச்சேரி வைத்திய அதிகாரி பணிமனையினால் எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான தொற்றா நோய்களுக்கான பரிசோதனை 27.01.2021 அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் சாவகச்சேரி நகர் பொது சுகாதார பரிசோதகர் பி.தளிர்ராஜ் மற்றும் சாவகச்சேரி வைத்திய அதிகாரி பணிமனை உத்தியோகத்தர்களால் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன .
![]() |
![]() |
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் நிதிப் பங்களிப்பில் வருடாந்தம் செயற்படுத்தப்படும் "கலைஞர் சுவதம்-2020" வேலைத்திட்டம் தென்மராட்சி பிரதேச செயலகப் பிரிவில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. நீண்ட காலம் கலைச்சேவைக்கு பங்காற்றிய தெரிவு செய்யப்பட்ட 60வயதுக்கு மேற்பட்ட கலைஞர்கள் பத்துப்பேரை அவர்களது வீடுகளுக்கு நேரடியாக சென்று சுகநலன் விசாரித்ததுடன் அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 3000ரூபா பெறுமதியான பொருட்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
![]() |
![]() |






























