"நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு" என்னும் அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்திற்கு இணங்க 2021 ஆம் ஆண்டிற்கான கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று காலை 8.45 மணிக்கு இடம்பெற்றது.கோவிட் 19 காரணமாக மேற்படி கடமை செயற்பாடுகள் பகுதி பகுதியாக ஆரம்பிக்கப்பட்டன .மதிப்புக்குரிய பிரதேச செயலாளரினால் தேசிய கொடி ஏற்றப்பட்டதுடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.இவ் நிகழ்வினை தொடர்ந்து உத்தியோகத்தர்கள் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.பிரதேச செயலாளர் திருமதி சு. உஷா அவர்களின் வாழ்த்து செய்தியினை தொடர்ந்து உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் , நிர்வாக உத்தியோகத்தர்,நிர்வாக கிராம அலுவலகர், முகாமையாளர் -சமுர்த்தி தலைமை பீடம் ஆகியோர் வாழ்த்து செய்தியினை வழங்கினர். பொதுசுகாதாரப் பரிசோதகரினால் கோவிட் 19 தொடர்பான விழிப்புணர்வு செய்தி வழங்கப்பட்டது. பிரதேச செயலாளர் அவர்கள் கடந்த ஆண்டு பல சவால்களை எதிர் கொண்ட போதும் தென்மராட்சி பிரதேச மக்களிற்காக சேவையாற்றிய அனைத்து உத்தியோகத்தர்களும் தனது நன்றிகளை தெரிவித்ததுடன் இனிவரும் காலங்களில் பொது மக்களிற்கான சேவையை நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் ஆற்ற வேண்டும் என்பதனை தெரிவித்தார்.

134167489 842498783271088 7418872264674343060 n
133491880 842498946604405 8837171332193829256 n
134064021 842500606604239 2067211390278019453 o

யாழ் போதனா வைத்தியசாலையில் நிலவும் குருதி தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் முகமாக பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் குருதி வழங்கும் நிகழ்வானது 12/11/2020 வியாழக்கிழமை இன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறுகின்றது.

 124356229 807337013453932 3866507960872490065 o 125211123 807336990120601 6287349391789318431 o
    

தென்மராட்சி பிரதேச செயலகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான பிரதேச மட்ட விளையாட்டு விழா-2020, 28/08/2020 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மட்டுவில் வளர்மதி விளையாட்டுக் கழக மைதானத்தில் பிரதேச செயலாளர் திருமதி சு .உஷா தலைமையில் நடைபெற்றது.

பிரதம விருந்திராக வடமாகாண விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளர் திரு பா.முகுந்தன் ,சிறப்பு விருந்தினராக யாழ் மாவட்ட செயலக விளையாட்டு உத்தியோகத்தர் திரு.க .விஜிதரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

பிரதேச மட்ட ரீதியாக CRC விளையாட்டுக் கழகமானது முதலாம் இடத்தையும், கச்சாய் கலைமகள் விளையாட்டுக் கழகமானது இரண்டாம் இடத்தையும் மட்டுவில் வளர்மதி விளையாட்டுக் கழகமானது மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது. தென்மராட்சி பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி  தேசிய மட்டத்தில் சாதனை புரிந்த புவிதரன் (கோல் ஊன்றி பாய்தல் ) விதுஷன் (400m ஓட்டம் ) ஆகியோரும் இன் நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.
 118849164 753449328842701 1190668549749002489 o 118785350 753450012175966 3458084723429602482 o   118990104 753449575509343 4256887736686438674 o  
  

தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவில் புதிதாக நியமனம் பெற்றுக்கொண்ட பட்டதாரிப் பயிலுனர்களுக்கான நியமனம் வழங்கல் நிகழ்வு மற்றும் நேர்முகத்தேர்வானது 02/09/2020 அன்று தென்மராட்சி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

 119042221 753456035508697 3534140394574677036 o  118794067 753456055508695 5531183708111042299 o
யூன் 08ம் திகதி உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு , வனரோபா தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட நாற்றுமேடைகளிலிருந்து பெறப்பட்ட 200 மலைவேம்பு (மகோகனி) கன்றுகள் எமது பிரதேச செயலக மற்றும் பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட 60 கிராம அலுவலர் பிரிவுகளிலுமுள்ள பொது இடங்களில் நடுகை செய்யப்பட்டன .
104045997 693086088212359 2426001863887108781 o 104423435 693092461545055 7317048845293647202 n
   

 

News & Events

08
Sep2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
Sep2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top