அரசகரும மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துதல் தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வும் மொழித்திட்ட குழுவை உருவாக்கும் நிகழ்ச்சித்திட்டமானது 2025.12.29 ஆம் திகதி திங்கட்கிழமை பி. ப 2.00மணிக்கு தென்மராட்சி பிரதேச செயலாளர் திரு. F. C சத்தியசோதி தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் வளவாளராக பிரதேச செயலாளர் கலந்துகொண்டதுடன், பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர், பிரதிதிட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
![]() |
![]() |
தேசிய பாதுகாப்பு தினம் மற்றும் சுனாமி ஆழிப்பேரலையின் 21 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
பிரதேச செயலகத்தில் இன்றைய தினம் (26.12.2025) காலை 09.30 மணிக்கு சுனாமி மற்றும் ஏனைய அனர்த்தங்களால் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி நிகழ்வு பிரதேச செயலாளர் திரு.F.C. சத்தியசோதி தலைமையில் நடைபெற்றது .
![]() |
![]() |
விவசாய அமைச்சின் கீழ் ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகத்தின் அனுசரனையுடன் பிரதேச செயலர் தலைமையில் 29.12.2025 அன்று J/300 கிராம அலுவலகத்தில் வாயுத்துப்பாக்கியின் பயன்பாடு தொடர்பான ஆய்வு கலந்துரையாடல் நடைபெற்றது. இந் நிகழ்வில் ஆராய்ச்சி உத்தியோகத்தர் கலந்து கொண்டு ஆய்விற்கான தகவல்களை மாவட்ட விவசாய உத்தியோகத்தர்கள், பிரதேச செயலகம் சாவகச்சேரி மற்றும் மருதங்கேணி விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள் மற்றும் கமக்கார அமைப்பினர் இடமிருந்து கலந்துரையாடல் மூலம் கருத்துக்களை பெற்றுக்கொண்டார்.
![]() |
|





























