![]() |
![]() |
![]() |
![]() |
தென்மராட்சி பிரதேச செயலக கைதடி சமுர்த்தி வங்கியின் பொதுசபைக் கூட்டமானது மதிப்பிற்குரிய பிரதேச செயலாளரின் பங்குபற்றுதலுடன் 13.01.2026 செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு கைதடி சரஸ்வதி சனசமூக நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது. இக் கூட்டத்தில் தலைமையக முகாமையாளர், முகாமைத்துவப்பணிப்பாளர், வங்கி முகாமையாளர், உத்தியோகத்தர்கள், சமுர்த்தி பயனாளிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். 2026 ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகதெரிவு இடம்பெற்றது. தலைவராக திரு.இ.யோகேஸ்வரன் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார்.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
|
சனாதிபதி நிதியத்தின் பிரதேச செயலகம் வரை பன்முகப்படுத்துதல் திட்டத்தின் மூலம் தென்மராட்சி பிரதேச செயலகத்தில் இருதய சத்திர சிகிச்சைக்கான ஆறாவது கொடுப்பனவாக ரூபா 250,000/- பெறுமதியான காசோலை சாவகச்சேரி நகர கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த திருமதி நாகரத்தினம் சந்திரலேகா அவர்களுக்கு 02.02.2026 ம் திகதி பிரதேச செயலாளர் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் கணக்காளர் மற்றும் சமூக சேவை உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
![]() |

























