பிரதேச செயலக நலன்புரிக் கழகத்தின் ஏற்பாட்டில் வாணி விழாவும் கும்பம் சரித்தல் நிகழ்வும் நேற்றைய தினம் 02.10.2025 வெகு சிறப்பாக நடைபெற்றது.காலை 9 மணியளவில் உத்தியோகத்தர்களுக்கிடையிலான தோரணம் பின்னுதல் மற்றும் மாலை கட்டுதல் போட்டி நடைபெற்றதை தொடர்ந்து பூஜை வழிபாடுகள் நடைபெற்றது.தொடர்ந்து பிரதேச செயலாளர் திரு F.C சத்தியசோதி அவர்களினால் வித்தியாரம்பம் நடைபெற்று கும்பம் சரித்தல் நிகழ்வு இடம்பெற்றது .தொடர்ந்து கலைநிகழ்வுகளும் பிரசாதமும் வழங்கப்பட்டு நிறைவுற்றது.
 
557326546 2003520667168888 3045676555126131017 n 557494297 2003519647168990 6408694695122992679 n

எமது தென்மராட்சி பிரதேச உதவிப் பிரதேச செயலாளராக திருமதி லாகினி நிருபராஜ் அவர்கள் இன்றைய தினம் (01.10.2025) தமது கடமையினை பொறுப்பேற்றார்.உதவிப் பிரதேச செயலாளர் அவர்களை வாழ்த்தி வரவேற்கின்றோம் .

556373469 2001709000683388 7573131140636839576 n   557773110 2001725800681708 946502054209586458 n

கொடிகாமம் மத்தி, கொடிகாமம் தெற்கு மற்றும் கொடிகாமம் வடக்கு ஆகிய கிராமங்களில் ஏற்படுகின்ற வெள்ள பாதிப்புக்களை குறைத்துக் கொள்ளும் நோக்கில் முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவதற்கான கலந்துரையாடல் 2025.09.24 காலை 9 மணிக்கு பிரதேச செயலாளர் திரு F. C சத்திய சோதி தலைமையில் நடைபெற்றது. இதன் போது கொடிகாமம் நாவலடி தொடக்கம் எருவன் வயல் வெளி வரையான வெள்ள நீர் வெளியேறும் வாய்க்கால் பிரதேச மக்கள் பங்கேற்புடன் சிரமதான முறையில் துப்பரவு செய்ய தீர்மானிக்கப்பட்டது. இப் பணியை நிறைவு செய்ய "உலக தரிசனம்" நிறுவனமானது நிதி பங்களிப்பு செய்யவுள்ளது. இந்த கலந்துரையாடலில் சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர், பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கிராம அலுவலர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், வட்டார உறுப்பினர்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

 

WhatsApp Image 2025 09 24 at 9.26.31 PM WhatsApp Image 2025 09 25 at 9.42.05 AM

யாழ்ப்பாண பொருளாதார மத்திய நிலையத்தின் மீள் அங்குரார்ப்பண நிகழ்வானது 2025.09.30 செவ்வாய்கிழமை காலை 9.30 மணிக்கு கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில் மட்டுவில் வடக்கு கிராம அலுவலர் பிரிவில் நடைபெற்றது.இந்நிகழ்வில் வர்த்தக வாணிப உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் கௌரவ வசந்த சமரசிங்க, வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெ.ரஜீவன் அவர்கள், வைத்திய கலாநிதி ச. சிறிபவானந்தராஜா அவர்கள், க.இளங்குமரன் அவர்கள், மாவட்ட செயலாளர் உயர்திரு.ம.பிரதீபன் அவர்கள் , வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், வர்த்தக வாணிப உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி. சாந்த ஜயரட்ண, யாழ் மாவட்ட பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், அழைக்கப்பட்ட திணைக்களங்களின் தலைவர்கள் , மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், சாவகச்சேரி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் மற்றும் உள்ளூர் அதிகார சபை கௌரவ உறுப்பினர்கள் , யாழ்மாவட்ட பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அழைக்கப்பட்ட உத்தியோகத்தர்கள்,பொருளாதார மத்திய நிலையத்தில் கடைகளை குத்தகைக்கு பெற்றுக்கொண்ட வர்த்தகர்கள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள்ஆகியோர் பங்குபற்றினர்.இந்நிகழ்வில் கலந்து கொண்ட பொதுமக்கள் ஆர்வத்துடன் பொருட்களை வாங்கி சென்றனர்.
 558141745 2000729494114672 4788065314264338784 n 556151777 2000738127447142 3275119963410474232 n 

முதியோர்களுக்கான தேசிய செயலகத்தினால் "ஆரோக்கியா" நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 23.09.2025 அன்று மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் மற்றும் கணக்காளர் அவர்களினால் முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் "ஆரோக்கியா" நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் எமது பிரதேச செயலகப் பிரிவை சேர்ந்த மூன்று முதியோர்களுக்கு தலா 25,000/= பெறுமதியான காசோலை வழங்கி வைக்கப்பட்டது.

WhatsApp Image 2025 09 24 at 11.29.05 AM 1WhatsApp_Image_2025-09-24_at_11.29.05_AM_2.jpg

WhatsApp_Image_2025-09-24_at_11.29.05_AM.jpg

News & Events

08
Sep2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
Sep2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top