தென்மராட்சிப் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சிறிய மற்றும் நடுத்தரக் கைத்தொழில் உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபடும் முயற்சியாளர்களுக்கு Business Clinic program ஆனது 17.07.2026ம் திகதி தென்மராட்சி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலக கணக்காளர் அ.கலைச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் சி.ஜெயஸ்ரீ அம்மையார், மாவட்ட செயலக சிறுகைத்தொழில் அபிவிருத்தி பிரிவு உதவி பணிப்பாளர் ச.சசீபன், வடக்கிற்கான கைத்தொழில் துறைகள் தலைவர் ஜஸ்மின் அம்மையார், மத்திய வங்கி- கிளிநொச்சி,மக்கள் வங்கி- சாவகச்சேரி, இலங்கை வங்கி-சாவகச்சேரி,commercial bank- Chavakachcheri, HNB, NSB, மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை,தொழில்துறை திணைக்களம்,சுகாதார வைத்திய அதிகாரி-சாவகச்சேரி, பிரதேச சபை, நகர சபை, மின்சார சபை, விதாத வளநிலையம்,கைத்தொழில் அபிவிருத்தி சபை, தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபை, provincial industry மற்றும் Business Registration officer ஆகிய சேவை வழங்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வில் 35 ற்கும் மேற்பட்ட சேவை வழங்கும் நிறுவனங்களும் 75 தொழில் முயற்சியாளர்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் வியாபாரப்பதிவு எவ்வாறு பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது பற்றிய நடைமுறைகளும், முயற்சியாளர்கள் தொழில் ரீதியாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் அவற்றினை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த வழிகாட்டல்களும், வங்கிக் கடன் குறித்த ஆலோசனைகளும் விபரங்களும் தொழில் முயற்சியாளர்களுக்கு விவரிக்கப்பட்டது.

750290153 2259357781585174 3878381853365936355 n 751871794 2259358014918484 8856673180402584140 n 
 749952734 2259358661585086 5216477413777467707 n  750585943 2259358141585138 617715087362881395 n
வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் நிதி உதவியுடன், தென்மராட்சியில் பூர்த்தி செய்யப்பட்ட வீடுகள் மக்கள் வசம் கையளிப்பு!
​வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் நிதி பங்களிப்புடன் தென்மராட்சிப் பிரதேசத்தில் 2026 ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட முதலாம் கட்ட வீடமைப்புத் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட இரு பயனாளிகளின் வீடுகள், மக்கள் பயன்பாட்டிற்காக கையளிக்கும் நிகழ்வு இன்று 17.07.2026 வெள்ளிக்கிழமை J/301 கோயிற்குடியிருப்பு மற்றும் J/318 மீசாலை கிழக்கு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் நடைபெற்றது.
​இந்நிகழ்வில் கைத்தொழில்கள் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் கௌரவ சதுரங்க அபேசிங்க(பா.உ) அவர்கள், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான கௌரவ க.இளங்குமரன் அவர்கள், ஆகியோர் கலந்துகொண்டு வீடுகளைப் பயனாளிகளிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தனர்.
​இதனைத் தொடர்ந்து, சமூக உற்பத்தி கிராமமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள J/345 மந்துவில் கிழக்கு கிராம அலுவலர் பிரிவில், 'பிரஜாசக்தி' தேசிய செயற்றிட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட உன்னிய வயற்கரை வாய்க்கால் புனரமைப்புப் பணிகளுக்கான ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.
​தொடர்ந்து நடைபெற்ற மக்கள் கலந்துரையாடலில், இப்பகுதி சமூக உற்பத்தி கிராமப் பயனாளிகளான 50 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டனர். இக்கலந்துரையாடலில் பிரதி அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோருடன், 'Clean SriLanka' தென்மராட்சி அமைப்பாளர் மருத்துவர் செல்வகணேஷ், நாடாளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் கா.பிரகாஷ் மற்றும் ஏனைய கிராம அலுவலர் பிரிவுகளின் பிரஜாசக்தி அமைப்புகளின் தலைவர்கள், உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு கிராமத்தின் எதிர்கால வாழ்வாதார மேம்பாடுகள் குறித்துக் கலந்துரையாடினர்.

 748438128 2257006845153601 970665289912604968 n

 749269283 2257007358486883 2612626312947124063 n  747948800 2257006978486921 8513717352838626254 n  

  748678468 2257007265153559 9203129256102000832 n

749036340 2257006855153600 4452010746575221541 n

 

தென்மராட்சி பிரதேச செயலக சமுர்த்தி வர்த்தக சங்க வருடாந்த பொதுக்கூட்ட நிர்வாகத் தெரிவானது மதிப்பிற்குரிய பிரதேச செயலாளரின் பங்குபற்றுதலுடன் 08.07.2026 புதன்கிழமை காலை 9.30 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இக் கூட்டத்தில் தலைமைப்பீட முகாமையாளர், கருத்திட்டமுகாமையாளர், உத்தியோகத்தர்கள், வர்த்தகர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். 2026 ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகதெரிவு இடம்பெற்றது. தலைவராக திரு.இ.கோபிகரன் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார்.

 WhatsApp Image 2026 07 13 at 11.48.43 AM  WhatsApp Image 2026 07 13 at 11.48.44 AM WhatsApp Image 2026 07 13 at 11.48.43 AM 1 

News & Events

08
සැප්2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
සැප්2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top