மட்டுவில் வடக்கில் அமைந்துள்ள பிரத்தியோக பொருளாதார மத்திய நிலையத்தின் முகாமைத்துவ குழுக்கூட்டம் 24.02.2026 ஆம் திகதி அன்று கௌரவ பிரதி அமைச்சர் R.H உபுல் சமரசிங்க (கூட்டுறவு அபிவிருத்தி), திரு.சாந்த ஜெயரத்தன (மேலதிக செயலாளர் , வர்த்தக அமைச்சு) , திரு வசந்த சேனநாயக்க (தவிசாளர் - வரையறுக்கப்பட்ட தேசிய விவசாய சந்தைகள் சேவைகள்) , திரு வசந்த ஜெயசுந்தர (பணிப்பாளர் - வரையறுக்கப்பட்ட விவசாயம் ) திரு M.M வீரவர்த்தன (பிரத்தியேக செயலாளர் , வர்த்தக அமைச்சு), மாவட்ட செயலாளர் , தென்மராட்சி பிரதேச செயலாளர் , பிரதி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் கடை உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.
 WhatsApp Image 2026 02 26 at 12.52.18 1  WhatsApp Image 2026 02 26 at 12.52.19
 
 

பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு நிகழ்ச்சித்திட்டம் - 2025 இன் கீழ் கெளரவ (வைத்தியர் )இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் முன்மொழிவில் 3.2 மில்லியன் பெறுமதியில் மண்டுவில் J/304 கிராம அலுவலர் பிரிவில் அமைக்கப்பட்ட பாரம்பரிய உணவகமானது இன்று (25.02.2026) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதேச செயலாளர், சாவகச்சேரி நகர சபை தவிசாளர் , உப தவிசாளர் நகரசபை சாவகச்சேரி மற்றும் சாவகச்சேரி நகர சபை உறுப்பினர்கள் கெளரவ கைலாயபிள்ளை , கெளரவ கஜிதன் ஆகியோரும் கெளரவ (வைத்தியர் )இராமநாதன் அர்ச்சுனா (பா.உ )அவர்களின் பிரதிநிதிகள், மண்டுவில். J/304 கிராம மட்ட உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் ஆகியோரும் பங்குபற்றினர்.

WhatsApp Image 2026 02 25 at 13.51.21   WhatsApp Image 2026 02 25 at 13.07.39

எமது முன்னாள் உதவி பிரதேச செயலாளர் திருமதி தமிழினி சதீஸ் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் ஞாபகார்த்தமாக தென்மராட்சி பிரதேச செயலக ஊழியர் நலன்புரி சங்கத்தின் அனுசரணையுடன் நடாத்தப்படும் இரத்ததான முகாமானது "உதிரம் கொடுத்து உயிர் காப்போம்" எனும் தொனிப்பொருளில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

 639174025 2128386611348959 3226272735653794231 n  640272797 2128558494665104 1160437355970085516 n
வட மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையுடன் தென்மராட்சி பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி நிலையம் நடாத்தும் கண்காட்சி - 2025 இன்று (25.02.2026) புதன்கிழமை காலை 10.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் திரு F.C . சத்தியசோதி தலைமையில் நடைபெற்றது.
இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக மாகாணப் பணிப்பாளர் (கிராம அபிவிருத்தி திணைக்களம் வடமாகாணம் ) திருமதி.பா.கஜானி அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் சிறப்பு விருந்தினர்களாக தென்மராட்சி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலர் திருமதி. நிருபராஜ் லாகினி அவர்களும், சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர் திரு.பொன்னையா குகதாசன் அவர்களும், சாவகச்சேரி ஒருங்கிணைப்பு தலைவரின் இணைப்பாளர் திரு. காராளசிங்கம் பிரகாஸ் அவர்களும், மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி S .சுனேத்திரா அவர்களும் கலந்து சிறப்பித்தனர் .
இவ் நிகழ்வில் ஆடை வடிவமைத்தல் மற்றும் அழகுக்கலை மனைப்பொருளியல் போன்ற பிரிவுகள் இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றன.
WhatsApp Image 2026 02 25 at 10.41.32  WhatsApp Image 2026 02 25 at 10.41.39 WhatsApp Image 2026 02 25 at 10.41.42 1 

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்களான முச்சக்கர வண்டி, கழிவுகல நாற்காலி, காற்றுமெத்தை மற்றும் motivation சக்கர நாற்காலி ஆகியன வழங்கப்பட்டதுடன் இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்வாதார மேம்பாட்டு பயிற்சி பெற்றவர்களுக்கான மின்சார உபகரணங்களை திருத்துவதற்கான உபகரணங்கள் மற்றும் வெல்டிங் உபகரணங்கள் 19.02.2026 அன்றைய தினம் பிரதேச செயலாளர் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

 WhatsApp Image 2026 02 19 at 16.13.47  WhatsApp Image 2026 02 19 at 16.12.53

News & Events

08
Sep2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
Sep2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top