![]() |
![]() |
|
![]() |
|
|
|
|
பாரம்பரிய மருத்துவர்களால் ஆயுர்வேத மருத்துவ முகாம் ஆனது 20.07.2026 திங்கட் கிழமை காலை 9.30 மணி தொடக்கம் 11.30 மணி வரை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாரம்பரிய மருத்துவர்கள் மற்றும் சமூக சித்த மருத்துவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனை வழங்கியதுடன் பிரதேச செயலாளர், பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் இதனூடாக பயன்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
![]() |
![]() |
|
|
|
![]() |
![]() |
வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள அனுசரணையில் பிரதேச பண்பாட்டுப்பேரவையும் வரணி கலாசார மத்திய நிலையமும் இணைந்து நடாத்திய பிரதேச ஆடிப்பிறப்பு விழா வரணி கலாசார மத்திய நிலையத்தில் பி.ப 3 மணிக்கு இடம்பெற்றது. இந் நிகழ்வில் விருந்தினர்களாக பிரதேச செயலக கணக்காளர் திரு அ.கலைச்செல்வன் அவர்களும், சமுர்த்தி தலைமை பீடமுகாமையாளர் திருமதி ஜெ.வசந்தி அவர்களும், சிட்டிவேரம் கண்ணகை அம்மன் ஆலயத்தலைவர் திரு சி.சுந்தரமூர்த்தி அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். வரணி குடும்ப முன்பள்ளி மாணவர்களும் கலாசார மத்திய நிலைய மாணவர்களும் கலைநிகழ்வுகளை வெகு சிறப்பாக ஆற்றியிருந்தனர்.
![]() |
![]() |
![]() |
|
|
![]() |
![]() |
































