நேர்மையான அரச சேவைக்கான நேர்மைக் கலாசாரம்' கிளீன் ஸ்ரீலங்கா தேசிய செயற்பாட்டை நடைமுறைப்படுத்தல் நிகழ்வின் ஜந்தாம் நாள் நிகழ்வு - 31.07.2026
நிலையான நேர்மை மிக்க பசுமைக் கலாசாரம் எனும் தொனிப்பொருளில் தெரிவு செய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் சிரமதானம் மற்றும் மரநடுகை இடம்பெற்றது.நேர்மை வாரத்திற்கு நேரொத்ததாக டெங்கு ஒழிப்பு சிரமதான நடிவடிக்கை எமது பிரதேச செயலக உட்புற மற்றும் வெளிப்புற வளாகத்தில் 31.07.2026 ஆந் திகதி பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்டது.
 PHOTO 2026 07 27 08 44 56  PHOTO 2026 07 27 14 23 51 1 PHOTO 2026 07 28 12 02 06 Copy 
நேர்மையான அரச சேவைக்கான ' நேர்மைக் கலாசாரம்' கிளீன் ஸ்ரீலங்கா தேசிய செயற்பாட்டை நடைமுறைப்படுத்தல் நிகழ்வின் இரண்டாம் நாள் நிகழ்வு - 28.07.2026 நேர்மை மிக்க டிஜிட்டல் அரச சேவை எனும் தொனிப்பொருளில் பிரதேச செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஒழுங்கமைப்பில் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கான விற்பனை சந்தை இடம்பெற்றது. Yaazhroots எனும் உள்ளூர் வாடிக்கையாளரை இணைக்கும் நிறுவனமானது இச் சந்தையில் பங்கு பற்றி Digital market இற்கான தொடர்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. இவ் online market இல் எமது பிரதேச செயலக சிறுதொழில் முயற்சியாளர்கள் இணைந்து கொண்டனர். இதன் மூலமாக சிறுதொழில் முயற்சியாளர்கள் Digital market place மூலமாக அவர்களது உற்பத்திப் பொருட்களை உலக நாடுகளிற்கு விற்பனைப்படுத்தும் செயற்பாட்டிற்கான தளம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
 WhatsApp Image 2026 07 31 at 3.01.32 PM WhatsApp Image 2026 07 31 at 3.01.33 PM 

WhatsApp Image 2026 07 31 at 3.01.30 PM

  WhatsApp Image 2026 07 31 at 3.01.31 PM

பாரம்பரிய மருத்துவர்களால் ஆயுர்வேத மருத்துவ முகாம் ஆனது 20.07.2026 திங்கட் கிழமை காலை 9.30 மணி தொடக்கம் 11.30 மணி வரை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாரம்பரிய மருத்துவர்கள் மற்றும் சமூக சித்த மருத்துவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனை வழங்கியதுடன் பிரதேச செயலாளர், பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் இதனூடாக பயன்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 WhatsApp Image 2026 07 20 at 4.15.17 PM 1  WhatsApp Image 2026 07 20 at 3.57.53 PM 2

 WhatsApp Image 2026 07 20 at 4.15.17 PM 4

 

WhatsApp Image 2026 07 20 at 4.15.17 PM 3

ஜூலை 27 முதல் ஜூலை 31 வரை "கிளீன் ஸ்ரீலங்கா தேசிய நேர்மை வாரம்” என ஜனாதிபதி செயலகத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் கீழ் தேசிய, மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் செயல்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
"நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" (Clean Sri Lanka) தேசிய செயற்பாட்டின் கீழ், நேர்மையான அரசு சேவையை வலுப்படுத்தும் நோக்கில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான முதல்நாள் சத்தியப் பிரமாண நிகழ்வு (27.07.2026) காலை 9.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
சத்தியப் பிரமாண நிகழ்வினைத் தொடர்ந்து, சட்டத்தை மதிக்கும் நேர்மை மிக்க அரச சேவை எனும் தொனிப்பொருளில் பிரதேச செயலாளர் திரு F.C. சத்தியசோதி அவர்களால் விழிப்புணர்வு உரை மேற்கொள்ளப்பட்டது.“சட்டத்தை மதிப்போம் – நேர்மைமிக்க அரசு சேவை” என்ற தொனிப்பொருளில் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் இந்நிகழ்வு நடைபெறுகிறது என பிரதேச செயலாளரால் தெரிவிக்கப்பட்டது.
அரச சேவையின் திறன், வினைத்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதன் மூலம் மட்டுமே ஊழலற்ற, பொறுப்புணர்வுமிக்க மற்றும் முன்மாதிரியான நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்க முடியும் எனவும் தெரிவித்தார். அதற்காக ஒவ்வொரு அரச உத்தியோகத்தரும் தமது பணிப்பொறுப்புகளை நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் வெளிப்படைத் தன்மையுடனும் நிறைவேற்ற வேண்டும்.இன்று நாம் மேற்கொண்டுள்ள நேர்மை உறுதிமொழி ஒரு அரச சேவையாளர் எவ்வாறு தமது கடமைகளை உயர்ந்த ஒழுக்கத்துடனும் பொறுப்புடனும் முன்னெடுக்க வேண்டும் என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது.அதுவே “நேர்மையான அரசு சேவை – தூய்மையான இலங்கை” என்ற இலக்கை அடைவதற்கான உறுதியான அடித்தளமாக அமையும் எனவும் தெரிவித்தார்.
758288792 2266197687567850 7796284126061477348 n 758264703 2266197627567856 1328758040453286515 n

வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள அனுசரணையில் பிரதேச பண்பாட்டுப்பேரவையும் வரணி கலாசார மத்திய நிலையமும் இணைந்து நடாத்திய பிரதேச ஆடிப்பிறப்பு விழா வரணி கலாசார மத்திய நிலையத்தில் பி.ப 3 மணிக்கு இடம்பெற்றது. இந் நிகழ்வில் விருந்தினர்களாக பிரதேச செயலக கணக்காளர் திரு அ.கலைச்செல்வன் அவர்களும், சமுர்த்தி தலைமை பீடமுகாமையாளர் திருமதி ஜெ.வசந்தி அவர்களும், சிட்டிவேரம் கண்ணகை அம்மன் ஆலயத்தலைவர் திரு சி.சுந்தரமூர்த்தி அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். வரணி குடும்ப முன்பள்ளி மாணவர்களும் கலாசார மத்திய நிலைய மாணவர்களும் கலைநிகழ்வுகளை வெகு சிறப்பாக ஆற்றியிருந்தனர்.

 749300788 2259530004901285 842167856277525717 n  749756039 2259530934901192 3419505506936457599 n  749300796 2259531544901131 4272331252152996314 n

  749629595 2259531498234469 6843710872470385911 n

 753164113 2259531068234512 3520707662279914566 n  750053946 2259531378234481 3566748825858045037 n

News & Events

08
Sep2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
Sep2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top